வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 31 டிசம்பர், 2009

இந்தோனேஷியக் கடலில் 3 மாதங்களாகப் படகில் பரிதவிக்கும் 250 தமிழர்கள் தொற்றுநோய்ப் பிடியில்!


இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுடன் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் இருப்பவர்களுக்குத் தொற்றுநோய் பரவத் தொடங்கியுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்;திரேலியாவிற்குச் செல்லும் வழியில் இலங்கையர்களுடன் பிடிபட்ட படகை இந்தோனேஷிய அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாகப் கடலிலேயே தடுத்து வைத்துள்ளனர். இந்தப் படகிலிருந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு மரணித்திருந்தார். இந்த நிலையில் படகில் உள்ள மேலும் பல இலங்கையர்கள் தொற்றுநோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக இரத்த வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து வினுஜா எனும் ஏழு வயதுச் சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை, 43 வயது நபர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ள அகதிகள் பலர், தாங்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். படகில் தொற்றுநோய் பரவியுள்ளதா என்பதை அறிவதற்கு வைத்தியர் ஒருவரை அனுப்புமாறும் அவர்கள் கோரியுள்ளனர் என்று கூறப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’