வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 நவம்பர், 2009

புலிகளின் கிழக்கு தளபதி ராம் கைது!


புலிகளின் கிழக்கு தளபதி ராம் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை 7ம் திகதி பொலனறுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ராம் படையினரின் பிடியில் இருந்து தப்பியோடியதை தொடர்ந்து அப்பகுதியில் 3000க்கு மேற்பட்ட படையினர் தேடுதல் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து மின்னேரியா தாங்கிக்கு அண்மையில் உள்ள காட்டு பகுதியில் வைத்து மீளவும் ராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணா புலிகள் இயக்கத்தைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து கிழக்கில் புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்ட ராம் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார். வடக்கில் இருந்து சில உறுப்பினர்களுடன் வெளியேறியிருந்த ராம் தனது உறுப்பினர்கள் பலரை விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலில் பலிகொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’