
கடந்த 26ம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு வந்தாறுமுலை கண்ணகி அம்மன் ஆலயத்தினுள் அதிசியமிக்க ஒலிஇ சலங்கை ஒலி என பல அதிசியங்கள் நிகழ்கின்றன. இந்த கண்ணகி அம்மன் ஆலயம் வருடத்திற்கு ஒருதடவையே திறக்கப்பட்டு விசேட பூசை செய்யப்படுகிறது. இவ் வருட பூசை தொடர்ந்து இவ் ஆலயக் கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது இருந்த போதிலும் கடந்த 26ம் திகதியில் இருந்து பூட்டப்பட்ட ஆலயத்தினுள் அதி சத்தம் மிக்க ஒலி கேட்டுக்கொண்ட வண்ணமே உள்ளது. கல்லை உடைப்பது போன்ற சத்தமும் சலங்கை ஒலி என தினந்தோறும் ஒலித்த வண்ணம் உள்ளது குறிப்பாக அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை நடைபெறும் போதெல்லம் இவ் ஒலி கேட்ப்பதாக தெரியவருகிறது. பூட்டிய ஆலயத்தினுள் நிகழும் அதிசிய ஒலியை கேட்ப்பதற்காக பெறுந்திரளான மக்கள் ஆலயத்தை நோக்கி வந்தவண்ணமுள்ளனர். இவ் அதிசியங்களை தொடர்ந்து இவ் ஆலயத்தினுள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட பூசை ஆலய பரிபாலன சபையினரும் ஊர்மக்களும் ஏற்பாடுசெய்துள்ளனர். இவ்வாறு தினந்தோறும் அதிசியங்கள் நிகழ்வது எதற்க்காக ஏற்படுகிறது என்பதும் சுனாமி போன்ற அனர்த்தம் ஏற்ப்படும் வாய்ப்பு ஏற்படுவதும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்பபோகிறது என்பது விளங்காத புதிராக உள்ளது. (மட்டு.நகர் கதிர்.)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’