
தனது படங்களில் சாதிக்கு எதிராக முழக்கமிடும் விவேக், கடைசியாக சரண்டர் ஆகியிருப்பது ஒரு சாதி அமைப்புக்கு முன்! அட, இதென்ன புதுக் கதை? புதுக் கதையெல்லாம் இல்லை. எனக்கு பின்னால் மூன்று கோடி முக்குலத்தோர் இருக்கிறார்கள் என்று சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தவர்தான் விவேக். இப்போது பிரச்சனை என்றதும் சாதி சங்க கூட்டத்திற்கே போய் முழங்கிவிட்டு வந்திருக்கிறார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டாராம் விவேக். அப்போது, எனக்கு எதிராக பத்திரிகையாளர்கள் வழக்கு போடுகிறார்கள். எனக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறும் முயற்சியும் நடக்கிறது. எனக்கு ஆதரவாக நீங்கள் களம் இறங்க வேண்டும் என்றாராம்.
விவேக்கை மட்டும் தனிமை படுத்தி பதிவு செய்யப்படும் வழக்குகள் என்றால் நாம் துணை நிற்போம். மற்றபடி எல்லா நடிகர்கள் மீதும் வழக்கு பாய்ந்தால், அதில் நடிகர் சங்கம்தான் தலையிட வேண்டும். நம்மால் முடியாது என்று தனது ஆதரவாளர்களை கலந்து பேசி முடிவெடுத்தாராம் இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சேதுராமன்.
விவேக் படங்களில் இனி ஒரு விஷயத்தை எதிர்பார்க்க முடியாது. அது சாதிக்கு எதிரான அவரது…. பொய் முழக்கம்! ஏனென்றால் ‘படிப்பது ராமாயணம். இடிப்பது பெருமாள் கோவில்’ என்ற அவரது சித்தாந்தம் இனிமேலும் எடுபடாதல்லவா?













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’