
பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சேதமடைந்த மத வழிபாட்டு தளங்களை புனரமைப்பது குறித்து ஒருவார காலத்துக்குள் அறிக்ககையொன்றை சமர்ப்பிப்பதற்கான அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் அம்பாறை சென்றல் கேம்ப் பகுதிக்கு விஜயம்; செய்த கட்சியின் தலைவரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
அதே வேளை இப்பிரதேசத்தில் எற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கான தீர்வை காண்பது குறித்து தமது கவனத்தை தாம் செலுத்தவுள்ளதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன்,கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.ஒலுவில்,கல்முனைப் பகதிகளுக்கு அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’