வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 அக்டோபர், 2009

மாதவனின் அடுத்த அவதாரம் கதாசிரியர்


மாடலிங்கில் கலை வாழ்க்கையை தொடங்கிய மாதவன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாத‌வனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக்க மும்பை சென்று மாதவனை சந்திக்க இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’