வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 அக்டோபர், 2009

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி சிறார்களின் இரண்டு நாள் கண்காட்சி (பட இணைப்பு)


கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி சிறார்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பொருட்களின் இரண்டு நாள் கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்

மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்டப்டுள்ள இக் கண்காட்சி இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக் கிழமையும் மட்டக்களப்பு இந்து கல்லூரி மண்டபத்தில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 24 கல்வி வலயங்களையும் சேர்ந்த 500 ற்கும் மேற்பட்ட முன்பள்ளிகளில் கல்வி பயிலும் சிறார்களின் ஆக்கங்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டதோடு மாகாணத்தின் பல பாகங்களிலுமிருந்து பெரும் எண்ணிக்கையிலான முன்பள்ளி சிறார்களும் பெற்Nறூர்களும் இதனை பார்வையிட வருகை தந்துள்ளனர்

மாலையில் முன்பள்ளிச் சிறார்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளன.

ஆரம்ப நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ,மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னாந்தராஜா ,மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’