வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
விக்டர் ஐவன் ராவய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்டர் ஐவன் ராவய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2011

விஜேவீர, பிரபாகரன், மற்றும் பின் லாடன் ஆகியோரது மூன்று கொலைகள்

விக்டர் ஐவன்

மெரிக்காவின் முதல்தர எதிரியும், முழு அமெரிக்காவையும் கிடுகிடுக்க வைத்த பயங்கரவாதியுமான பின் லாடனை இறுதியில் அமெரிக்காவால் ஒருவழியாகக் கொல்ல முடிந்தது. சில காலங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவுகளால் பின் லாடன் பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத் எனுமிடத்திலுள்ள ஒரு மாளிகையில் மறைந்து வாழுவதைக் கண்டுபிடிக்க இயலுமாகவிருந்தது. கண்டுபிடிப்புகள் உறுதியாக்கப் பட்டதும், அமெரிக்காவின் ஜனாதிபதியும் மற்றும் அவரது சிரேஷ்ட உதவியாளர்களும் உலகின் மறுபக்கத்திலிருந்து வீடியோ ஒளித்திரைகளில் நடைபெறும் நடவடிக்கைகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் பின் லாடனை கொலை செய்யும் திட்டம் மேற்கொள்ளப் பட்டது.