
சிலிங்கோ கூட்டு நிறுவனங்களின் தலைவர் லலித் கொத்தலாவல நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றம் இதற்கான உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. கோல்டன் கார்ட் மோசடி தொடர்பான வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லலித் கொத்தலாவல வெலிகட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கோல்டன் கார்ட் கணக்கில் வைப்பிலிட்டவர்களின் பணத்தை திருப்பிச் செலுத்த 125 மில்லியன் ரூபாவினை வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது