இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000 த்துக்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-



