இன்று உலக ஊடக சுதந்திர தினமாகும். இத்தினத்தை முன்னிட்டு பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக இப்போதே நாம் ஊடக சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கிறோம்.
ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல், பயிற்சி நிறுவனங்களை அமைத்தல், வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்தல், ஓய்வூதிய திட்டமொன்றை நடைமுறைப் படுத்துதல் ஆகிய தேவைகள் பூரணப்படுத்தப்படும் .
அதேவேளை ஊடக சுதந்திரத்தைப் போல் நாட்டின் ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
1991 மே மாதம் 3ஆம் திகதி நமீபியாவில் ஆபிரிக்க அச்சு ஊடக மாநாட்டில் ‘விண்டோக்’ பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அப்பிரகடனத்தின் மூலம் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமை சுதந்திர ஊடகமொன்றின் தேவை உணரப்பட்டதுடன் சர்வதேச மட்டத்தில் சுதந்திர சுயாதீன மற்றும் பல்தர ஊடகமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவையான அக்கறை உணரப்பட்டது.
யூனெஸ்கோ அமைப்பின் 26ஆவது உச்சி மாநாட்டில் விண்டோக் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன் அப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டதையடுத்து சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தின் 19ஆவது சரத்தின் மூலம் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் பேச்சு சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போதும் அந்த உரிமையை உறுதிப்படுத்த முயற்சித்தே வந்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’