
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்தொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாத சுமார் 5000 மீன்பிடிப் படகுகள், தோணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன், பதிவு செய்யப்படாத படகுகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 450 ஆழ்கடல் இயந்திரப் படகுகள், 1250 வெளி இணை கரையோர இயந்திரப் படகுகள், 1300 கடல் தோணிகள், 2800 வாவித் தோணிகள் என்பன தினமும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள இம்மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் தமது படகுகளைக் கடற்தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யாது, சட்ட விரோதமான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி இறுதி அறிவித்தல் என்றும் அத்திகதிக்குள் பதிவு செய்யப்படாத படகுகளின் உரிமையாளர்கள் மீது திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’