
மொனராகலை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவென விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இலங்கை செஞ்சிலுவை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடும் வரட்சி நிலவும் பகுதிகளுக்கு பௌசர் மூலம் தண்ணீரை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் சுரேஷ் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் வரட்சியினால் இதுவரை 24000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’