வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 அக்டோபர், 2009

நாடளாவிய ரீதியில் மின் தடை : விசாரணைகள் ஆரம்பம்


நாடளாவிய ரீதியில் கடந்த வாரம் ஏற்பட்ட மின் விநியோகத் தடை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையும், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் தனித் தனியாக இந்த மின் விநியோகத் தடை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பெர்டினாண்டோவின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பெரேரா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’