-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 15 செப்டம்பர், 2009
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் அரசுக்கு தோல்வி - ஒப்புக்கொண்ட பிரதமர்
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் அரசுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் காவல் துறை தலைவர்களின் மூன்று நாள் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், மாவோயிஸ்டுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்களது ஊடுருவல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள் வன்முறையை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வன்முறை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மாவோயிஸ்டுகள் பிரச்னையை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக கையாள முடியாது என்று கூறிய மன்மோகன்,அந்த அமைப்பினர் பல பகுதிகளிலுள்ள பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் ஆதரவை பெற்றுள்ளதாகவும், இவர்கள் சமூகத்த்தின் ஒரு அங்கமாகவும், இளைஞர்களாகவும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’