ஹெரோயின் போதை பொருட்களுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் அடங்கிய 34 வில்லைகளைத் தனது வயிற்றில் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார். தமக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இவரது வயிற்றிலிருந்த ஹெரோயின் வில்லைகள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
-




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’